பஸ் கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
பஸ் கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரியுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தினால் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 700 ரூபாவும், நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 1200 ரூபாவும் மேலதிகமாக செலவாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு குறித்து ஏனைய பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை அதிகாரபூர்வமாக முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri