சர்வதேசம் எதிர்கொள்ளவுள்ள பாரிய நெருக்கடி.. இணையத்தை பரபரப்பாக்கும் 2026 பற்றிய கணிப்புக்கள்!
உலகில் ஏற்படும் பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசிகள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் கணித்ததாக பொதுவாகவே பேசப்படுகின்றது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரின் கணிப்பின் படி, 2026ஆம் ஆண்டில் 3ஆம் உலகப் போரின் அபாயம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார பின்னடைவு
இதன் காரணமாக, உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரிக்கும் என்றும் மிக பாரியளவிலான பொருளாதார பின்னடைவுகள் உலகளவில் ஏற்படும் என்றும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

2026 ஆம் ஆண்டு சற்றே தொடங்கியுள்ள நிலையில், புதிய ஆண்டில் கால்பதிக்கும் அனைவரும் வாழ்வின் மாற்றங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தீர்க்கதரிசிகள், ஜோதிடர்கள் என அடையாளப்படுத்தப்படும் எதிர்காலத்தை கணிக்கும் நபர்களின் கருத்துக்கள் பேசுபொருளாகி வருகின்றன.
அந்தவகையிலேயே, எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படும் நாஸ்டர்டாமஸ், 500 ஆண்டுகளுக்கு முன்னர் 2026இல் இத்தகைய மோசமான நிலை ஏற்படும் என கணித்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உச்சகட்ட பதற்றம்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ், எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை 465 வருடங்களுக்கு முன் எழுதிய தனது புத்தகத்தில் பாடல் வடிவில் உள்ளடக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

அவர், ஏற்கனவே ஹிட்லர் குறித்தும், பிரெஞ்சு புரட்சி உட்பட பல நிகழ்வுகள் குறித்தும் கணித்துள்ளதுடன் பல இயற்கை பேரிடர்களையும் முன்கூட்டியே கணித்திருந்தமையே 2026 பற்றிய கணிப்புக்களை உற்று நோக்க வைக்கின்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு 3ஆம் உலகப் போரின் அபாயம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்ததாகவும் உலகளாவிய அளவில் பெரும் மோதல்கள் உருவாகி, அது மிகுந்த அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அத்துடன், 2026 ஆம் ஆண்டில் கடற்படை அல்லது கடல்சார் பகுதியில் ஒரு பெரிய சம்பவம் உலக கவனத்தை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பெரும் அதிர்வலை
ஒரு நாட்டின் தவறான அரசியல் அல்லது இராணுவ முடிவு காரணமாக கடல்சார் பதற்றம் திடீரென அதிகரித்து, முக்கிய நாடுகளுக்கிடையே மோதல் சூழல் உருவாகலாம் எனவும் அவரின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

உச்சகட்ட பதற்றமாக ஒரு பெரிய கப்பல் மூழ்கடிக்கப்படும் சம்பவம் நிகழக்கூடும் என்றும், அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2026 ஆம் ஆண்டில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கலாம் என்றும், குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடி வேலைவாய்ப்பு இழப்பு, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரித்து, சமூக அமைதியின்மையை உருவாக்கக்கூடும் எனவும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும், இவ்வாறு முன்வைக்கப்படும் கணிப்புக்கள், தீர்க்கதரிசனங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், நவீன கால உலக அரசியல் சூழலே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri