மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை
நாட்டின் கோவிட் நிலைமையைக் கருத்திற்கொண்டு மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக் காலத்தில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறையைக் கடைப்பிடிக்காமை காரணமாக எதிர்வரும் வாரத்தில் கோவிட் தொற்று நிச்சயமாக அதிகரிக்கும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சம்மேளனத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொற்றுக்களில் பெரும் எழுச்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
எனவே, நிலைமையை மோசமாக்கும் என்பதால் மே தினத்தில், எந்த பேரணிகளையும் நடத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் கோருவதாக உபுல் ரோஹன கோரியுள்ளார்.
கோவிட் வைரசின் பரவலைப் பொறுத்தவரை இலங்கை ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்தநிலையில் புது வருடக்காலங்களில் மக்களின் மோசமான நடத்தையின் விளைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளிப்படும்.
எனவே, தற்போது கோவிட் தொற்றுக்கள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், நாட்டின்
மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று அவர் வலியுறுத்தினார்
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam