மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை
நாட்டின் கோவிட் நிலைமையைக் கருத்திற்கொண்டு மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக் காலத்தில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறையைக் கடைப்பிடிக்காமை காரணமாக எதிர்வரும் வாரத்தில் கோவிட் தொற்று நிச்சயமாக அதிகரிக்கும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சம்மேளனத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொற்றுக்களில் பெரும் எழுச்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
எனவே, நிலைமையை மோசமாக்கும் என்பதால் மே தினத்தில், எந்த பேரணிகளையும் நடத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் கோருவதாக உபுல் ரோஹன கோரியுள்ளார்.
கோவிட் வைரசின் பரவலைப் பொறுத்தவரை இலங்கை ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்தநிலையில் புது வருடக்காலங்களில் மக்களின் மோசமான நடத்தையின் விளைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளிப்படும்.
எனவே, தற்போது கோவிட் தொற்றுக்கள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், நாட்டின்
மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று அவர் வலியுறுத்தினார்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
