இலங்கையில் உள்ள மாகாண சபைகளை காப்பாற்ற மோடியிடம் கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு எதிராக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்சபை இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளை ரத்துச்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கட்சியின் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
1987ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி இலங்கையில் செறிந்து வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகளை வழங்குவதில் மாகாண சபைகள் முக்கியமானவையாகும்.
இந்தநிலையில் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் நிதியுதவி உட்பட்ட பல்வேறு உதவிகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.