பெண்கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்
நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள...
அத்துடன் பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்டுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை இன்றைய தினம் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கிராம அலுவலர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் இரவு நேர அனர்த்தங்கள், மரணங்கள் போன்ற விடயங்கள் நிகழுமிடத்து அவ்வாறான இடங்களுக்கு பெண் கிராம அலுவலர்கள் செல்வதைத் தவிர்த்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வார நாட்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டிய மூன்று தினங்களில் காலை எட்டு மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணி வரை மட்டுமே அலுவலகத்தில் பணியாற்றவுள்ளதாகவும் கிராம அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 24 நிமிடங்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
