நாட்பட்ட நோய்களுடைய சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றுமாறு கோரிக்கை!
நாட்பட்ட நோய்களுடைய சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்பட்ட நோய்களை உயடைய 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமானது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இலங்கை சிறுவர் நல விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் கல்லூரியினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளில் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பைசர் மற்றும் மொடர்னா ஆகிய கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நலின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் கொள்ளளவு நிரம்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
210 கோவிட் தொற்றுடைய சிறார்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியுள்ளது எனவும் இதில் தற்பொது 200 சிறார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
