வீடுகளில் மரணம் நிகழ்ந்தால் பின்பற்ற வேண்டிய விடயங்கள்
கிண்ணியா பகுதியில் உள்ள வீடுகளில் மரணம் நிகழ்ந்தால் பின்வரும் விடயங்கள் சம்பந்தமான வழிகாட்டல்கள் கடைப்பிடிக்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
1-மரணித்த உடலை திடீர் மரண விசாரணை அதிகாரி அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் வரை கழுவக்கூடாது.
2-உடனடியாக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.
3-அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது கிராம உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்.
4-அனைத்து இறந்த உடல்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படும்.
5-தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருந்ததால் அன்டிஜன் நெகடிவ் ஆக இருந்தால் மேலதிக பி.சி.ஆர் பரிசோதனைக்காக உடல் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். பொசிட்டிவ்வாக இருந்தால் ஒடடமாவடிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.
6-ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்படும் ஜனாஸா மரப்பெட்டியில் அடைக்கப்பட்டுக்
கொண்டு செல்லப்படுவதால் உரிய தரப்பினர் பெட்டிகளை நேர காலத்தோடு ஏற்பாடு செய்ய
வேண்டும் என தெரிவித்துள்ளார்.