குஞ்சுக்கால்வெளியில் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை

Sri Lankan Tamils Mullaitivu Thurairajah Raviharan
By Shan Feb 28, 2026 10:30 AM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாமென பொலிசாருக்கும் கடிதம் அனுப்பப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்

தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்

பதற்ற நிலை

குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளால் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு தீர்வுகாணுவது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று (27.02.2026) இடம்பெற்ற கலந்துரையாடலியே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குஞ்சுக்கால்வெளியில் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை | Request Ancestral Relics Tamils Kunjukalveli

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 3மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டவிரோதமாக உப்பளம் அமைப்பதற்கு முயற்சித்த தரப்பினர் ஆகியோர் வருகைதரவில்லை.

இந்நிலையில் குறித்தகூட்டத்தில் குஞ்சுக்கால்வெளிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு தாம் தமது இடங்களிலிருந்து இடம்பெயரும்வரையில் பயிற்செய்கையில் ஈடுபட்டுவந்த தமக்குரிய தனியார் அறுதி உறுதிக் காணிகள், 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பிற்பாடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயத்திற்குரிய காணிகள் எனக் கூறப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது மாவட்டசெயலாளரிடம் முறையீடு செய்யப்பட்டது.

அத்தோடு இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமது பயிற்செய்கைக் காணிகளில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு சட்டநடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன்போது மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இத்தகையசூழலில் குஞ்சுக்கால் வெளியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது அறுதி உறுதிக் காணிகளில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்களம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறையிடப்பட்டது.

எனவே குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமது பூர்வீக அறுதி உறுதி பயிர்ச்செய்கைக் காணிகளை தமக்கு மீட்டுத்தருமாறு இதன்போது மாவட்டசெயலாளரிடம் காணிக்குரிய மக்களால் தமது காணி ஆவணங்களுடன் கோரிக்கைக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US