தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான தமிழ்ச்செல்வனை படுகொலை செய்யத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியவர், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தான் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான தமிழ்ச்செல்வன் போன்ற இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்குவதற்குத் தேவையான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு அதிகாரியை இவ்வாறு வேட்டையாடுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
புலனாய்வு அமைப்பு
போரின் போது சுரேஷ் சாலேவின் சேவை மகத்தானது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான தமிழ்ச்செல்வனை படுகொலை செய்யத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியவர் அவர்தான். புலனாய்வு அமைப்புகள் எதிரிக்குள் இருந்து செயல்படுகின்றன, எனவே அவர்கள் பல்வேறு நபர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு முதலில் எச்சரித்தது சுரேஷ் சாலே மற்றும் அவரது குழுவினர் தான். அந்தத் தகவலைப் புறக்கணித்து இன்று அதே நபரைக் குறை கூற முயற்சிப்பது அபத்தமானது.

தேசிய பாதுகாப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி, உளவுத்துறை அதிகாரிகளை சிறையில் அடைப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. இது புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட இப்ராஹிம் போன்ற சந்தேகநபர்களின் சொத்துக்களை விடுவித்து, நாட்டைக் காப்பாற்றிய புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்தது ஒரு இழிவான துரோகம். இந்த செயல்முறையின் இறுதி இலக்கு கோட்டபய ராஜபக்ஷ.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam