வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் சபையில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட விடயம்
வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் தொடர்ச்சியாக வழிபாடுகளை செய்து வந்தனர்.
ஆனால் மலையை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
என்ற போதும் நீதிமன்றத்தால் மலை சேதப்படுத்தப்படவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்ச்சியாக மக்கள் வழிபட்டு வந்த ஆலயம்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கேட்பது குறித்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கான அனுமதியை எடுத்து தருமாறே என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
