மக்களின் உயிரைக் காப்பாற்றும் வீரர்களுக்கு எதிரான அடக்குமுறை

Srilanka People Gotapaya rajapaksa
By Independent Writer Jun 05, 2021 12:06 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கொடிய தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வசதிகளுக்காகச் சுகாதார ஊழியர்கள் போராடுகின்ற சூழ்நிலையில், சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பானது அடக்குமுறை நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

கோவிட் தொற்று மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற நிலையில் சுகாதார ஊழியர்கள் நோயாளிகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேணுகின்றனர்.

எனினும் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான குறைந்தபட்ச வசதிகளையேனும் அவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகளை விஞ்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கோவிட் தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம், அவுஸ்திரேலிய அரசு நேற்று பில்லியன் கணக்கான சுகாதார உபகரணங்களைப் பரிசாக வழங்கியுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்களும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாதியர்கள் மற்றும் உதவி வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையில் 24 தொழிற்சங்கங்கள் கூட்டாக, ஊழியர்களின் தேவைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இதற்கமைய, நேற்றைய தினம் (03) காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சுகாதார ஊழியர்கள் 5 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார ஊழியர்களின் ஒரு குழு தங்கள் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி அத்தியாவசிய சேவை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

அத்தகைய தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், 2021 ஜூன் 2 திகதியிடப்பட்ட 2230/9ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஊடாக, ஜனாதிபதி சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதி இவ்வாறு நடந்து கொண்டதாக, ஜூன் 3, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

" கோவிட் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காகப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசியைக் கோரி வேலை நிறுத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், கிராசேவகர்கள் தடுப்பூசி கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோதும், அந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, கிராம சேவகர்கள் தடுப்பூசி கிடைக்கப்பெறாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.” என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, இலங்கையில் கோவிட் தொற்று நோயுடன் போராடி, சுகாதார சேவை ஊழியர்கள் தங்கள் சேவைகளைத் தொடர அயராது உழைத்து வருகின்ற நிலையில், சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

"அவ்வாறான நிலையில், அவசரமாக அத்தியாவசிய சேவை குறித்த அறிவிப்பை வெளியிடுவதானது, தொழிற்சங்க நடவடிக்கையை அடக்குவதாக அமையும் என்பது தெளிவாகிறது." எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த செயல் வடிவம் அந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதே எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார ஊழியர்கள் தமது சேவைகளின் பணிகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகளைக் கோருகையில், அந்த நிலைமையைப் பயன்படுத்தி அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவது என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

தொற்றுநோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான வசதிகளை வழங்காமல் சுகாதாரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை அடக்கும் செயற்பாட்டை, தொழிற்சங்கத் தலைவர்களான ஜோசப் ஸ்டாலின், ரவி குமுதேஷ், ஜகத் குருசிங்க மற்றும் சிந்தக பண்டார ஆகியோர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கோவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்துச் சந்தித்த, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஏராளமான பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகளை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கினார்.

இந்த பாதுகாப்பு உபகரணங்களில் 16,500 நுண்ணுயிர் பாதுகாப்பு அங்கிகள், 25,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் , 100,000 கையுறை தொகுதி , 175 கண்ணாடி மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் போது முன்னணி சுகாதார ஊழியர்களால் பயன்படுத்தக்கூடிய பதினைந்து 25 லீட்டர் குளிர் பெட்டிகள் ஆகியவை அடங்கும்.

கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு 11.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

GalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US