தமிழர் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிய இராணுவச் சோதனைச் சாவடி தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Mannar Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka Charles Nirmalanathan
By Ashik Jun 21, 2024 01:58 PM GMT
Report

மன்னார் (Mannar) மாவட்டம் பிரதான பாலத்தடியில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனைச் சாவடி  முதன் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனைச் சாவடி இன்றையதினம் (21.06.2024) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாக இந்த சோதனைச் சாவடியை அகற்றுமாறும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனைச் சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் வழங்கியிருந்தனர்.

மீண்டும் ஆரம்பமான தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம்

மீண்டும் ஆரம்பமான தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம்

இராணுவ கட்டுமானங்கள்

இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஜனாதிபதியிடம் குறித்த சோதனைச் சாவடியை அகற்றித் தருமாறு நேரடி கோரிக்கையை முன்வைத்தார்.

தமிழர் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிய இராணுவச் சோதனைச் சாவடி தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | Removal Of Check Post Under Mannar Main Bridge

அதனையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.

தமிழர் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிய இராணுவச் சோதனைச் சாவடி தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | Removal Of Check Post Under Mannar Main Bridge

எனினும், அப்பகுதியில் இராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவக் கட்டுமானங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.  நீண்டகாலமாக அந்தப் பகுதியில் இந்த சோதனைச் சாவடி இருந்து வந்துள்ளது. 

மன்னார் பகுதிக்குள் இந்த சோனைச் சாவடி அமைந்துள்ளதன் காரணமாக,  சோதனைச் சாவடியுடனான பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். அத்துடன் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதன் காரணமாக மக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.


மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் கலாசாரம்: சாணக்கியன் குற்றச்சாட்டு

மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் கலாசாரம்: சாணக்கியன் குற்றச்சாட்டு

யாழ்.கல்லுண்டாய் பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

யாழ்.கல்லுண்டாய் பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US