மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள்

Tamils Mullaitivu Sri Lankan political crisis Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) May 07, 2024 12:07 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

மணலாறு(வெலிஓயா) பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வரும் புல்மோட்டை வீதியில் பல இடங்களில் பிள்ளையார் கோவில்கள் காணப்படுகின்றன.

சைவ மக்களின் வழிபாட்டிடங்களில் புத்தர் சிலைகளை வைத்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஒரு பகுதி சிங்கள மக்களின் செயற்பாடுகளிடையே இந்த பிள்ளையார் கோவில்கள் சிங்கள மக்களால் வைத்து வழிபடப்பட்டு வருவது தொடர்பில் சிந்திக்கத் தூண்டுவதாக சமூகவிடய ஆய்வாளர் சுட்டிக் காட்டுகின்றார்.

முல்லைத்தீவில்(Mullaitivu ) இருந்து புல்மோட்டைக்குச் செல்லும் யார் ஒருவராலும் குறைந்தது பத்து பிள்ளையார் ஆலயங்களை கடந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இவை அனைத்தும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணப்படுகின்றன.

வீதிகளில் பிள்ளையார் கோவில்களை வைத்து வழிபடுவது இலங்கையில் இயல்பான செயற்பாடாகும்.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது

பிள்ளையார் ஆலயங்கள் 

இலங்கையில் உள்ள பிள்ளையார் ஆலயங்களில் இரண்டு வகை இருப்பதனை அவதானிக்கலாம். ஒன்று கிழக்குப் பிள்ளையார் ஆலயங்கள் மற்றையது மேற்குப் பிள்ளையார் ஆலயங்கள்.

கிழக்கு நோக்கி பார்த்தவாறு அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயங்களை கிழக்குப் பிள்ளையார் ஆலயங்கள் என்று வகைக்குறித்து நோக்கலாம். பொதுவாகவே தமிழர்களின் பிள்ளையார் ஆலயங்கள் கிழக்கு நோக்கியதாகவே அமைந்திருக்கும்.

மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள் | Religious Worship In Harmony In Mullaithivi

மேற்குத் திசை நோக்கிப் பார்த்தவாறு இருக்கும் பிள்ளையார் ஆலயங்கள் மேற்குப் பிள்ளையார் ஆலயங்கள் என்று வகைக்குறித்து நோக்கலாம். பொதுவாக சிங்கள மக்களின் வழிபாடுகளில் அரிதாக மேற்குப் பிள்ளையார் கோவில் வழிபாட்டு முறைகளை அவதானிக்க முடிகின்றது என சமூக விட ஆய்வுகளில் கற்றலில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

எனினும் தமிழ் மக்களிடையே மேற்குப் பிள்ளையார் வழிபாட்டு முறைகள் இருப்பதில்லை என பிள்ளையார் ஆலய குருக்கள் ஒருவருடன் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆண் தாதி கைது

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆண் தாதி கைது

மேற்குப் பிள்ளையார் கோவில் 

புல்மோட்டைக்கு செல்லும் பாதையில் ஒரேயொரு மேற்குப் பிள்ளையார் கோவில் மட்டும் இருப்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.

மணலாறு நோக்கிய பாதையில் பயணப்பட்டு புல்மோட்டைக்கு திரும்பும் சந்தியில் இந்த மேற்குப் பிள்ளையார் ஆலயம் இருக்கின்றது.

மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள் | Religious Worship In Harmony In Mullaithivi

இது போன்றதொரு மேற்குப் பிள்ளையார் கோவில் முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் களிக்காட்டுப் பகுதியிலும் காணப்படுகின்றது.

இந்த களிக்காட்டு மேற்குப் பிள்ளையார் கோவில் களிக்காட்டில் இருந்த இராணுவ முகாம் இராணுவத்தினரால் வழிபடப்பட்டு வந்து இப்போது பொதுமக்களால் வழிபடப்பட்டு வருவதாக களிக்காட்டு வயல் நில விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் மேற்கு வாசல் பக்கத்தில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியைப் பார்க்கும் வண்ணம் உள்ள பிள்ளையார் கோவிலும் மேற்குப் பிள்ளையார் கோவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே சுட்டப்படும் எல்லா வகையான பிள்ளையார் கோவில்களும் வழிப்பிள்ளையார் ஆலயங்களாகும். இவை ஆகம விதிப்படி வழிபடப்படாது கிராமிய வழிமுறையில் வழிபடப்பட்டு வருவதாக குமுழமுனையைச் சேர்ந்த பிரதேச விடயங்கள் தொடர்பாக தெளிவாக பேசவல்ல ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முரண்பாடுகள் எப்படி தோன்றுகின்றன

பிள்ளையார் ஆலயத்தில் புத்தரை வைத்து விட்டு இது புத்த மதத்திற்குரிய இடம் என முரண்டு பிடித்து இனங்களுக்கிடையே சண்டைகளை மூட்டி வரும் போக்கு மணலாற்றுப் பகுதியில் அவதானிக்க முடிகின்றது.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பெரிய புத்தர் சிலையை நிறுவி விகாரை அமைக்க முற்பட்டு முரண்பட்ட செய்திகள் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தமையினை இங்கே குறிப்பிடலாம்.

மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள் | Religious Worship In Harmony In Mullaithivi

புல்மோட்டைக்கு திரும்பும் சந்தியிலும் ஆலமரத்துக்கு கீழுள்ள பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலையை வைத்திருந்ததையும் இங்கு நோக்கத்தக்கது.

எனினும் ஜனகபுரத்தில் ஒரு பிள்ளையார் கோவிலின் மேல் புத்தர் சிலைகள் கவனிப்பாரற்று இருக்கும் வேளை வழிபாட்டுக்குரிய கடவுளாக பிள்ளையார் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இத்தகைய அவதானிப்புக்கள் மூலம் சிங்கள மக்கள் சிலரால் புத்தரை சைவ ஆலயங்களில் வைத்து விட்டு முன்னெடுக்கப்படும் அத்தனை முயற்சிகளும் மக்களிடையே முரண்பாடுகளை தக்க வைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு முயற்சியாகவே இருக்கும் என சமூகவிட ஆய்வாளர் வரதனுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு

பொருத்தமான நெறியாளுகை அவசியம்

மக்களிடையே அமைதியான வாழ்க்கை முறையொன்றினைக் கட்டியெழுப்பும் உள்ளார்ந்த நல்லெண்ணம் கொண்ட சிறந்த அரசியல் நெறியாளுகை ஒன்று அவசியமாகின்றது.

இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிகழ்ந்த மணலாற்றுப் பகுதியில் ஒரு குறித்த வீதியின் அவதானிப்பிலேயே மதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன என்ற சந்தேகம் வலுவாக தோன்றும் போது இலங்கை முழுவதுமான அவதானிப்புக்களும் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளின் வரலாறுகளும் ஒருசேர ஆய்வுக்குட்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்யலாம் என்பது திண்ணம்.

மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள் | Religious Worship In Harmony In Mullaithivi

எனினும் இது நடைமுறைச் சாத்தியமற்றது.சிங்கள மக்களின் வாழிடமொன்றில் பிள்ளையார் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருக்கும் போது அதே ஆலயத்தில் புத்தர் சிலை வெளியேயும் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகளின் உள்ளும் வைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில் நீராவியடி பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் புறக்கணிக்கப்பட்டு பிள்ளையார் வழிபாட்டினை மேற்கொள்ள வரும் சைவ மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தமையானது வலுவான சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

சிங்கள மக்களுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டு ஒரு சிலரால் தங்கள் சுயலாபங்களுக்காக நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் வழிபாட்டுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மக்களிடையேயும் தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் முன்வைக்கக்கூடிய முன்மொழிவாகும்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US