மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு
வவுனியா(Vavuniya), மதுரா நகர் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபரெருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (06.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த மோகன்(45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மதுரா நகர் பகுதியில் வசிக்கும் உயிரிழந்த நபரின் மருமகனே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து முரண்பாடு
வவுனியா, மதுராநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமனார் மீதே மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபரை, உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு காெண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பாெலிஸார் விசாரணைகளை மேற்காெண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam