யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் மதமாற்றிகள்: மறவன்புலவு சச்சிதானந்தம் குற்றச்சாட்டு (photos)
மதமாற்ற சபை ஒன்று யாழ். உடுவிலில் விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை நடத்துவதற்கு அனுமதி கேட்பதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஊடக அறிக்கையில் மேலும், முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன், கிறிஸ்தவ மதமாற்ற சபையினருக்கு சைவப் பாடசாலைக்குள் மதமாற்றும் முயற்சிக்கான கூட்டம் நடத்த உரிமம் கொடுத்துள்ளார். இது குறித்து சிவ சேனைக்குச் செய்தி கிடைத்துள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அதனைத் தொடர்ந்து சிவசேனைத் தொண்டர்கள் அங்கு சென்று வித்தியாசாலையைச் சுற்றிச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து, சிவன் கோயிலாருடன் சிவசேனை அமைப்பினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளனர்.
அந்த வகையில் போதகரை அழைத்த பொலிஸ்
நிலையத்தினர் கூட்டத்தைத் தடை செய்துள்ளார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.

50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam