பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கையெழுத்து போராட்டம் (Photos)
பங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கையெழுத்துப் பெறும் போராட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (28.01.2023) வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன மத பேதமின்றி வருகை

அதில் ''வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய்'' எனவும் வலியுறுத்தி சத்திய பிராமணம் செய்யும் வகையில் சமாதான நீதவான் முன்னிலையில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri