பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கையெழுத்து போராட்டம் (Photos)
பங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கையெழுத்துப் பெறும் போராட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (28.01.2023) வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன மத பேதமின்றி வருகை

அதில் ''வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய்'' எனவும் வலியுறுத்தி சத்திய பிராமணம் செய்யும் வகையில் சமாதான நீதவான் முன்னிலையில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.



கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam