இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை : இயக்குனர் ரஞ்சித் ஜோசப்
இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்று ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
நாளை 10ஆம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம்
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள ஊழி திரைப்படம் நாளை 10ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இலங்கையில் இத் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான நிலவரத்தை இவ் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் 8ஆம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.
எனினும் 48 மணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் குறித்த செய்தி எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழலில் உள்ளோம்.
கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம். எனவே, நாளைய தினம்(10.05.2024) இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு இலங்கை வெளியீடு தொடர்பாக வெளிப்படுத்த உள்ளோம் என்பதையும் அறியத் தருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
