வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 121 போதைப் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பாவனைக்கு அடிமையாகிய 121பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள்
வடபகுதியை சேர்ந்த இளைஞர்களே போதைக்கு அடிமையாகிய நிலையில் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐவர் வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேடுதல் நடவடிக்கை
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri