பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகள் நேற்று(15) மாலை தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கைதிகளை தேடும் நடவடிக்கை

இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தை சேர்ந்த கைதிகள்

அவ்வாறு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் மாலை விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய 5 பேரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam