கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி! (VIDEO)
கிளிநொச்சி - அம்பாள்நகர் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாள்நகர் பகுதியினை சேர்ந்த டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி காணாமல்போன நிலையில்,உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தேடிய நிலையில், சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 13 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam