கிண்ணியா கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் கிண்ணியா பொலிஸாரினால் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இச்சடலம் காணப்பட்டதாகவும் மீனவர்களின் கட்டுவலையில் சடலம் ஒதுங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வில் வெளியைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் - றிஸ்வி (வயது 42) என
அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.