75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு
மன்னார் - பேசாலை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்படவிருந்த 75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று (06.09.2024) பேசாலை கடலோரப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தி எட்டு (188) கிலோகிராமுக்கு அதிக நிறையுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட கேரள கஞ்சா கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை நடவடிக்கை
கடற்படை நடவடிக்கைகளால் தரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்தே குறித்த போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் கைப்பற்றி பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan