தமிழர் பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகர் பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு லோயிட் அவ்னியு (lloyeds avenue) வீதியின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு பொலிஸார் வருகை தந்து சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் அடையாளம் காணும்வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணை

இவ்வாறு உயிரிழந்த நிலையில் இருந்த ஆண் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேகத்திற்கிடமக சில பொருட்கள் மற்றும் இரத்த காயங்கள் உடலில் உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam