அம்பாறை மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு
அம்பாறை - கல்முனை காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (20) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகவும், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தோழர் வசந்தபியதிஸ்ஸவும் விசேட அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து ரத்துவத்தை,மஞ்சுல ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனர்நிர்மாணம்
இந்த பாலமானது சுமார் 90 வருடம் பழமை வாய்ந்த பாலம் என்பதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய பாலமானது புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கமைய இந்த பாலம் சுமார் 247 மில்லியன் நிதி உதவி ஊடாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி. அலியார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்,தேசிய மக்கள் சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
