தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இராணுவத்திலிருந்து வெளியேறிய, இளைப்பாறியவர்களே பெரும்பாலும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று(23.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். இராணுவத்திலிருந்து பெரும்பான்மையானோரை வெளியில் அனுப்பும் போது அதற்குரிய சர்வதேச ரீதியான நடவடிக்ககைகளை எடுக்குமாறு ஏற்கனவே நான் அரசாங்கத்திற்கு கூறியிருந்தேன்.
இராணுவ வாழ்க்கையிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறஅவர்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் சர்வதேச ரீதியாக கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் இது தொடர்பான சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றது. அதே வேளை இராணுவத்திலிருந்து சிலர் துப்பாக்கிகளுடன் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளனர்.
சிலவேளைகளில் இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கிகளை பணத்திற்கு வாங்கியும் வைத்துள்ளனர். எனவே இராணுவத்தினர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
