மைத்ரியிடம் CID வாக்குமூலம் பெற வீட்டிற்கே சென்றது ஏன்..! வெளியான காரணம்

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Wickremesinghe Ranil Sri Lanka Police Investigation NPP Government
By Dhushi Apr 26, 2026 11:21 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

இதன்படி, மைத்ரி விக்ரமசிங்க விடுத்துள்ள எழுத்துப்பூர்வ கோரிக்கையினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்

ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்

வீட்டிற்குச் சென்றமைக்கான காரணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவைச் சிகிச்சை முடிந்து தேறிவரும் நிலையில், அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வீட்டிற்குச் சென்றமை குறித்து கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன கடந்த 24ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

மைத்ரியிடம் CID வாக்குமூலம் பெற வீட்டிற்கே சென்றது ஏன்..! வெளியான காரணம் | Reason For Cid Obtaining Maithri S Statement

முன்னாள் ஜனாதிபதியின் அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவரது ஆரோக்கியத்தை மைத்ரி விக்ரமசிங்கவே கவனித்து வருவதாகவும், அவரும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கூட எவரும் அனுமதிக்கப்படாத ஒரு நேரத்தில் வெளியார் வருகை தருவது முன்னாள் ஜனாதிபதியின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் என வஜிர அபேவர்தன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியமை தொடர்பில் கூறப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் வழங்க, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முன்னிலையாகுமாறு மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அனுப்பட்ட கடிதம்

அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்த மைத்ரி விக்ரமசிங்க, தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த வாக்குமூலத்தை கொழும்பு 03, ஐந்தாவது ஒழுங்கையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் மைத்ரி விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்து, வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார்.

மைத்ரியிடம் CID வாக்குமூலம் பெற வீட்டிற்கே சென்றது ஏன்..! வெளியான காரணம் | Reason For Cid Obtaining Maithri S Statement

இதன்படி, குறித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்ய கடந்த 24ஆம் திகதி வருகை தரவுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரி 20ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தினத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சைபர் தாக்குதல் அபாய பட்டியலில் இலங்கை! எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்

சைபர் தாக்குதல் அபாய பட்டியலில் இலங்கை! எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US