அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! அரசாங்கம் அறிவிப்பு
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்காக 1948 முதல் ஆரம்பமான அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கிய விலைமதிப்பற்ற உதவிக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
2019 ல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
