எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார்! - மைத்திரியின் புதல்வர் அறிவிப்பு
எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்திற்கும், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கும் வரக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மகளிர் மற்றும் இளைஞர் பேரவைகளை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவராகவும் தஹாம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட தஹாம் சிறிசேன, பொலன்னறுவை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் சம்மேளனத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன், பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியை சமாளிக்க நீண்டகால திருத்த நடவடிக்கை தேவை. இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆகும்.
பொலன்னறுவை மாவட்டமும், பொலன்னறுவை மக்களும் தனது தந்தையின் இதயம் எனவும், எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கும், பொலன்னறுவை மக்களுக்கும் வரக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.