இந்திய அணியின் சகல துறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு உபாதை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் சகல துறை வீரர் ரவீந்திர ஜடேஜா உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட அவரது பரிசோதனை முடிவுகள் மும்பையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உபாதையின் தன்மை குறித்த மதிப்பீடு
இதன்படி தொடையில் ஏற்பட்டுள்ள உபாதையின் தன்மை குறித்த மதிப்பீடு இன்று மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலைக்குள் தொழில்முறை மருத்துவ ஆலோசனை எதிர்பார்க்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
