மன்னாரில் கடற்றொழிலாளர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன் (Photos)
மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.
இன்றைய தினம் (07.10.2023) சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.
பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.
10 அடி நீளம்
பெரும்பாலும் இவ்வகை மீன்கள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.
அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும்.
ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.
இவ் வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு, உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
