வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலருக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு பொதுச்சந்தையில் 60 பேருக்கு நடாத்தப்பட்ட இந்த பரிசோதனையில் ஊடகவியலாளர் ஒருவரும் வியாபாரி ஒருவருமாக இருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் பொதுச்சுகாதார பிரிவினரால் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் இன்று காலை மட்டக்களப்பு பிரதான சந்தைத்தொகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டன.
பொதுச்சந்தையில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் இன்று ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பொதுச்சந்தையில் 60பேருக்கு நடாத்தப்பட்ட இந்த பரிசோதனையில்
ஊடகவியலாளர் ஒருவரும் வியாபாரி ஒருவருமாக இருவர் கோவிட் தொற்றுக்குள்ளானது
கண்டறியப்பட்டுள்ளது.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
