முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இன்று(14.10.2024) இடம்பெறவுள்ளது.
பிரசார நடவடிக்கை
இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
