தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா..

Ranil Wickremesinghe Sri Lanka Magistrate Court Bimal Rathnayake Ranil Wickremesinghe Arrested
By Benat Aug 26, 2025 03:24 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், பிணை வழங்கப்படுமா அல்லது  விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் பரப்பில் எழுந்துள்ளது. 

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இன்றுவரை(26) விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலையாவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது. 

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள்

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய இரகசியங்கள்

நீதிமன்றில் முன்னிலையாவாரா ரணில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 


அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதால் அவரால் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன தெரிவித்திருந்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடும் என்று ஐக்கிய  மக்கள் சக்தி தரப்பினர் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். 

ரணிலின் கைதின் பின் இந்திய புலனாய்வை திணற வைத்த அநுரவின் புலனாய்வு

ரணிலின் கைதின் பின் இந்திய புலனாய்வை திணற வைத்த அநுரவின் புலனாய்வு

பிணையா விளக்கமறியலா..

மேலும், இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கப்படுமா அல்லது  விளக்கமறியல் நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் மட்டத்தில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா.. | Ranil Wickremesinghe Arrested

அத்துடன், ரணிலுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளதுடன், ரணிலுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் இன்று கொழும்புக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

எவ்வாறாயினும்,  நீதிமன்றத் தீர்ப்புக்களை விமர்சிக்கும் மற்றும் கேள்விக்குட்படுத்தும் பேரணிகளை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது போன்ற கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்  பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டவர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

ரணிலின் வழக்கு விசாரணை இன்று! நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள்.. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ரணிலின் வழக்கு விசாரணை இன்று! நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள்.. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அரசியல் பழிவாங்கலா...

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 40 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா.. | Ranil Wickremesinghe Arrested

அமைச்சரின் பிமலின் கருத்தின் ஊடாக இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்பது உறுதியாகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை  சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன்,  நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம் உள்ளிட்ட  முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சார்ந்த பொதுஜன பெரமுன தரப்பினரும் ரணிலுக்கு எதிரான இந்த நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று வாதிடுகின்றனர். 

எனினும்,  நீதிமன்ற தீர்ப்புக்களுடன் அரசாங்கம் ஒருபோதும் தொடர்புபடுவதில்லை.  ரணிலின் விடயத்தில் நீதித்துறை பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று அரச தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  

ரணிலுக்காக பெரும் சதியை செய்த சமாதான தூதுவர்

ரணிலுக்காக பெரும் சதியை செய்த சமாதான தூதுவர்

சிக்கப்போகும் மைத்திரி - கோட்டாபய! சிஐடி தரப்பால் கசிந்த இரகசியம்

சிக்கப்போகும் மைத்திரி - கோட்டாபய! சிஐடி தரப்பால் கசிந்த இரகசியம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US