ரணிலின் கைது! இந்தியாவில் இருந்து அநுர அரசாங்கத்திற்கு வந்த அறிவுரை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்
மேலும், இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம் பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் சசி தரூர் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
Concerned about the detention of former Sri Lankan President Ranil Wickramasinghe on what, on the face of it, seem trivial charges. His health issues have already seen him taken to the prison hospital. I call on the government of Sri Lanka -- while fully respecting that this is… pic.twitter.com/ojuEfEu4FG
— Shashi Tharoor (@ShashiTharoor) August 23, 2025




