ரணில் இதுவரை குற்றவாளி இல்லை! அநுர தரப்பு அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார்.
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரணிலின் வழக்கு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

26 ஆம் திகதி என்ன நடக்கும் என்பதில் பொதுமக்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்படல், மற்றும் எதிர்வரும் 26 ஆம் திகதி சட்ட நடவடிக்கைகளைத் தொடர்தல் அல்லது பிணை வழங்காமல் இந்த விஷயத்தை விசாரணைக்கு உட்படுத்துதல் என இரண்டு சாத்தியமான வழிகள் உள்ளன.
இந்த சட்ட நடவடிக்கைகளில் தான் தலையிட மாட்டேன் என்றும், அத்தகைய தலையீடு பொருத்தமற்றது மற்றும் தவறானது என்றும். மேலும், இந்த நேரத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது கூட பொருத்தமானதல்ல.
"தீர்ப்பு பெலவத்தை அலுவலகத்தில் எழுதப்பட்டது" என்று சில தரப்பினர் கூறி வருவதாகவும், நீதிமன்றம் தலையிட்டாலோ அல்லது அத்தகைய அறிக்கையை வெளியிடும் நபர் குறித்து யாராவது முறைபாடு அளித்தாலோ, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அந்த நபருக்கு எதிராக சட்டம் பாய்ச்சப்படலாம்.
சட்டத்தின் ஆட்சி
எனவே, "தயவுசெய்து முன்பு போல பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம்" என்று அமைச்சர் போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது சட்டத்தின் ஆட்சி நிலவுவதால், பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதுபோன்ற பொறுப்பான நடத்தை நமது சமூகத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri