கட்சிகளை தாண்டிய ரணிலின் வாக்கு அறுவடை

TNA M. A. Sumanthiran Ranil Wickremesinghe sriLankaelection2024 srilankapresidentialelection2024
By Dharu Sep 09, 2024 08:27 AM GMT
Report

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு குறைவாக இருந்தாலும், தேர்தல் நாளில் இலங்கைத் தமிழர்கள் அவரை ஆதரிப்பார்கள் என கட்சி தரப்புக்களில் இருந்து எதிர்வுகள் வெளிவருகிறது.

தமிழ்க் கட்சிகளின் ஆதரவைப் பொருட்படுத்தாமல் ரணில் நேரடியாக தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ் வாக்குகளை அறுவடை செய்ய முயற்சித்து வருவது வெளிப்படையாகிறது.

வடக்கின் முக்கிய கட்சியான தமிழரசுக்கட்சியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஒரு தரப்பும், தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை ஆதரிக்க ஒருதரப்பும் முன்வந்துள்ளன.

இந்த பிளவு பட்ட நிலைப்பாடு என்பது ரணிலுக்கு சாதகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு நாட்டின் அரியாசனத்தில் அமர ரணில் எவ்வாறான ராஜதந்திரத்தை கையாண்டார் என சுமந்திரன் நாடாளுமன்றில் மற்றும் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

அப்படி என்றால் தமிழரசுக்கட்சி பிளவு பட்டிருப்பது ரணிலின் திட்டமிடலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்புகளும் மேலோங்கியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு முக்கிய தகவல்

சுமந்திரன் அணியின் தீர்மானம்

வடக்கு - கிழக்கின் முக்கிய அரசியல் தரப்புக்கள் பொதுவேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தமிழரசு கட்சி சஜித்தை ஆதரித்துள்ளது.

அதில் இது சுமந்திரன் அணியின் தீர்மானம் எனவும் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்சிகளை தாண்டிய ரணிலின் வாக்கு அறுவடை | Ranil Trying To Harvest Tamil Votes

முதலாவதாக ஒவ்வொரு கட்சியும் கூறுவதை போல மக்களின் வாக்குகளை பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுடைய வலுவான நிலைப்பாடு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

அவர்கள் சுயமாக வாக்களிப்பார்கள் என்பதற்கான தெளிவான குறிகாட்டிகள் அவர்களின் நிலைப்பாடுகளில் வெளியாகிறது.

ரணில் விக்ரமசிங்க தனக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவு தளம் உள்ளது என்று பகிரங்கமாக கூறி வருகின்றார்.

செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் இந்தக் கட்சிகளுக்கு மேலதிகமாக ரணிலுக்கு ஆதரவாக சில தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்தக் கட்சிகளின் ஆதரவு இருந்தபோதிலும், ஜனாதிபதியை ஆதரிப்பதை விட எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் கட்சிகள் பலமுடையதாக இருப்பதால் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதில் ரணில் விக்ரமசிங்கவை விட சஜித் பிரேமதாசவுக்கு சாதகமாகும் என அவரின் ஆதரவாளர்களால் கூறப்படுகிறது.

எனினும் , இந்த கட்சிகள் வழங்கும் ஆதரவு முற்றிலும் ஒன்றுபட்டதாக அமையவில்லை.

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரசாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரசாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

வடக்கு கிழக்கு தமிழர்கள்

எம்.பி.க்கள் உட்பட சில செல்வாக்கு மிக்க கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்களை மீறி ரணிலுக்கு ஆதரவை அறிவித்துள்ளனர்.

இலங்கையின் சிறுபான்மை சமூகத்தை அதிகம் கொண்டுள்ள மற்றும் மூன்று சிறுபான்மை சமூகங்களும் காணப்படுகின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகள் தேர்தலின் போக்கை மாற்றக்கூடியவை.

கட்சிகளை தாண்டிய ரணிலின் வாக்கு அறுவடை | Ranil Trying To Harvest Tamil Votes

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் வடக்கு கிழக்கு தமிழர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.

இவர்களின் தமிழர்களை பொருத்தமட்டில் முதன்மையான அரசியல் அமைப்பு சமீப காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடிப்படையாக கொண்டதே.

2020 தேர்தலில் பத்து ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டுள்ளது.

அதன் மூன்றில் இரண்டு ஆதரவு கொண்ட டெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் உட்பட மற்ற மூன்று கட்சிகளுடன் சேர்ந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிடிஎன்ஏ) என்ற புதிய கூட்டணியை உருவாக்குகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போது தனித்து நிற்கிறது.

2022 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஐக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.

எனினும் பத்து எம்.பி.க்களில் நான்கு பேர் மட்டுமே டலஸுக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

தனிப்பெரும் கட்சி

இதன் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் தனக்கு வாக்களித்ததாக ரணில் சூசகமாகத் தெரிவித்தார்.

இந்த போக்குகளின் நிலைப்பாட்டின் அடிப்படையில் தற்போது , நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான இலங்கைத் தமிழர் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

கட்சிகளை தாண்டிய ரணிலின் வாக்கு அறுவடை | Ranil Trying To Harvest Tamil Votes

இது சஜித்துக்கு மன உறுதியும், ரணிலுக்கு பெரும் அடியும் என கூறப்பட்டது.

ஆனால் சுமந்திரன் கூறுவதை போல ராஜதந்திர நிலைப்பாட்டுடன் நகரும் ரணில் நகர்ந்தது என்னவோ தமிழரசு கட்சியின் தலைவரை நோக்கி.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு பொன்னாடை வரவேற்ப்பு வழங்கியமையும், அவரின் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது என கூறியமையும் சிறுபான்மை வாக்குவேட்டையில் ஒரு இராஜதந்திர காய் நகர்வு.

முன்னர் கூறியது போல சிறுபான்மை மக்கள் வாக்குறுதியை தாண்டி, சுயமாக சிந்திக்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் .

அதன் வெளிப்பாடு இம்மாதம் 22ஆம் திகதி வெளிப்படையாகும் என்பதே நிதர்சனம்...

ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு, கிழக்கு மக்களின் முடிவு: பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு, கிழக்கு மக்களின் முடிவு: பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US