புதிய மறுசீரமைப்புக்களே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் : ரணில் தெரிவிப்பு
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்றைய தினம் (23.03.2024) நடைபெற்ற "யுனைடட் யூத்" இளைஞர் ஒன்றியம் உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
நாட்டின் பொருளாதாரம்
ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றுள்ளேன்.

சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்தேன்.
எனவே, புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நாட்டின் தற்போதைய நிலையை மேம்படுத்த முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening