ரங்கே பண்டாரவின் கூற்றை மறுதலிக்கும் ரணில் தரப்பு
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியை இன்னும் இரண்டு வருடங்கள் வகிக்கும் வகையில் நீடித்துக் கொடுக்க வேண்டுமென ரங்கே பண்டார கூறிய கருத்தை ரணில் தரப்பு மறுத்துள்ளது.
சிவில் சமூகம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியை வகிக்க இடமளிக்க வேண்டும் என்ற சாரப்பட அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் சிவில் சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை உருவானது.
இந்நிலையில் குறித்த கருத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ரணில் தரப்பு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |