முற்றாக நீக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு! பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், 6 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மற்றும் 163 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் குறித்த நீக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு
இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 307 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 24 தற்காலிக உத்தியோகத்தர்களும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
