ரணிலுக்கே முழு ஆதரவு!..கல்வி இராஜாங்க அமைச்சர் பகிரங்க அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil wickramasinghe) போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2025 ஒகஸ்டில் முடிவடைகின்றது. எனவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஏற்புடையதாக அமையும்.
சம்பள உயர்வு
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம். கடந்தமுறை சம்பள நிர்ணய சபை ஊடாகவே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இம்முறையும் அவ்வாறு நடக்கும் என நம்புகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |