ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் (PHOTOS)
யாழ்ப்பாண நகரில் இன்று(21) ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிணை கொண்டாடும் வகையில் இந் நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு |
உத்தியோகபூர்வ பதவி பிரமாணம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இன்று காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமர் பதவி
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிரதமர் பதவியை வகிக்க நால்வரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னாள் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கா பதியேற்றதை அடுத்து கட்சி ஆதரவாளர்கள் இன்று (21) பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஜ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 8 வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
மட்டக்களப்பு ஜ.தே.கட்சி முகாமையாளர் ரி.லிங்கேஸ்வரன் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி காந்தி பூங்காவிற்கு முன்னாள் தேசிய கொடியை கட்டி நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் முன்னாள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.










சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
