ரணில் அரசு விரைவில் கவிழும்: மைத்திரி உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆயுள் விரைவில் முடியும்
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதன் ஆயுள் விரைவில் முடியப்போகின்றது.தேர்தல் ஒன்றின் ஊடாகவே ஆயுள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
தற்போதைய அரசுக்கு நிலையான பயணம் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய பேரவை
இதே வழியில் பயணித்தால் தேசிய உற்பத்தி முழுமையாக இல்லாமல் போகும். போராட்டம் வேறு வடிவில் வெடிக்கும். மாணவர்கள் கூட வீதிக்கு இறங்குவார்கள்.
இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காது."என கூறியுள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam
