மைத்திரியின் அதிரடி தீர்மானம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற தேசிய பேரவையில் இணைந்துக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கூட்டம்

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பிரேரணையின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட, அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தேசிய சபைக்கு நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் செப்டெம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் நாளை (29) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam