சுதந்திரக்கட்சியை சீரழிப்பவர்கள் தொடர்பில் சாமர சம்பத் பகிரங்கம்-செய்திகளின் தொகுப்பு
மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தவுக்கு சென்றவர்கள், அவ்விருவருமே சுதந்திரக்கட்சியை சீரழிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஆனால் என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது.
நான் கட்சியை விட்டு செல்லவும் மாட்டேன். நாங்கள் சுதந்திரக்கட்சி ஊடாக அரசியல் நடத்தியவர்கள். சுதந்திரக்கட்சியின் தற்போதை செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜி.எல். பீரிசுடன் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சென்று, 10 வருடங்கள் இருந்தவர்.
மைத்திரிபால சிறிசேனவும் சிறிகொத்தவுக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். அவர்கள் இருவருமே கட்சியின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,