ரணிலுக்கு மீண்டும் அழைப்பாணை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அழைப்பு
இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி காலை 09.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், சில காரணங்களால் அன்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே எதிர்வரும் 25ஆம் திகதி காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு இன்றையதினம் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
