ரணிலின் கைதிற்கு முன் அநுர தரப்பு விட்டுள்ள பெரும் தவறு
அநுர அரசாங்கம் முதலில் சிறிய கள்ளர்களையெல்லாம் பிடித்துவிட்டு பின்னர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருக்க வேண்டும் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க பரம்பரையாகவே செல்வந்தராக இருக்கும் நிலையில் அவர் நிதிஊழல் செய்திருக்க மாட்டார் என்று மக்களுக்கு தெரியும்.
எனவே அவரை பட்டலந்த விவகாரம் போன்ற விடயங்களுக்காக கைது செய்திருந்தால் மேற்குலகம் அவருக்கு கைகொடுத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



