ரணிலோடு முட்டிக்கொள்ளப்போகும் மகிந்த - ஆட்டம் ஆரம்பம்
ரணில் எவ்வாறு ராஜபக்சர்களை கடந்து, தான் முன்செல்வார் என்ற கேள்வி எழுவதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பலருக்கும் ஒரு பயம் இருக்கும் அதேவேளை ராஜபக்சர்களுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது ரணிலை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதானால் தீவிர முயற்சி செய்தாக வேண்டும். இந்த நிலையில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றார் ரணில்.
அத்துடன் மீண்டும் கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிப்பது ரணிலுக்கு சவாலாக அமைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மொட்டுக்கட்சியுடன் ரணில் மோதும் காலமும் இனி வரும் காலங்களில் வரும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை மேலும் ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,