உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thulsi Oct 05, 2023 04:52 PM GMT
Report

உலக நாடுகள் இலங்கையை இரண்டாம் தர நாடாக கருதுவதற்கு ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரு முக்கிய காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் (05.10.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவர் நாடாளுமன்றில் தெரிவித்ததாவது, ஜனாதிபதி என்ன அடிப்படையில் ஆசிய நாட்டவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளா என என்ன அடிப்படையில் வினவினார் என எனக்கு தெரியாது.

வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் சரத் வீரசேகர அதிரடி கருத்து

வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் சரத் வீரசேகர அதிரடி கருத்து


இரண்டாம் தரப் பிரஜைகள்

அந்த ஊடகவியலாளர் எம்மை இரண்டாம் தரப் பிரஜை என எண்ணியிருந்தால் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்துள்ளீர்கள். நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதி.

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல் | Ranil Also Reason World Consider 2Nd Class Peoples

உலகிலுள்ள எந்தவொருவராவது நாம் இரண்டாம் தரப் பிரஜைகள் என எண்ணுவார்கள் ஆயின், அவ்வாறு எண்ணுவதற்கு நீங்களும் ஒரு காரணம்.

தொடருந்தை எடுத்துக்கொண்டால், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என உள்ளது.

எனினும் சிலர் திருட்டுத்தனமாகவும் பயணம் செய்கின்றனர். நாங்கள் திருட்டு தனமாக பயணம் செய்வோரின் பட்டியலில் இருக்கின்றோம். அந்த நிலைமையை யார் ஏற்படுத்தியது.

சனல் 4 தொடர்பில் ஏன் பதில் வழங்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணிலின் கேள்வி(Video)

சனல் 4 தொடர்பில் ஏன் பதில் வழங்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணிலின் கேள்வி(Video)

நீதிபதிக்கு பாதுகாப்பில்லாத நாடு

சர்வதேச ரீதியாக நடைபெறும் மாநாடு மற்றும் சந்திப்புக்களுக்கு நாம் செல்லும் போது, நீதிபதிக்கு பாதுகாப்பில்லாமல் வெளியேறும் நாட்டில் இருந்து வருகின்றீர்களா என கேட்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரால் அச்சுறுத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் அழுத்தம் பிரயோகிக்கப்படும் நாட்டில் இருந்து தானே நீங்கள் வருகின்றீர்கள் என கேட்கின்றனர்.

அங்கு சென்று நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக என கேட்டு, நாட்டை நியாயப்படுத்துவதில் பயனில்லை. நீங்கள் செய்யும் இவ்வாறான செயல்களால் தான் இந்த நிலைமை ஏற்படுகின்றது.

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல் | Ranil Also Reason World Consider 2Nd Class Peoples

பிரகீத் எக்னலிகொட 

பிரகீத் எக்னலிகொட காணாமல் போன்றுடன் 5 ஆயிரத்து 1 நாட்கள் நிறைவடைந்துள்ளன. பிரகீத் எங்கே என நாடாவிய ரீதியில் உள்ளவர்கள் கேட்டுகின்றனர்.

பிரகீத் எக்னலிகொடவிற்கு என்ன நடந்தது என்பதை கூறுவதற்கு தாம் தயாராக இருப்பதாக கூறுகின்றார். எனினும் ஜனாதிபதி என்ன கூறுகின்றார்.? சர்வதேச விசாரணை தேவையில்லை என கூறுகின்றார்.

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல் | Ranil Also Reason World Consider 2Nd Class Peoples

அவ்வாறு இருக்கும் போது எமக்கு எவ்வாறான பெயர் கிடைக்கும். பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என கூறுவிட்டு வந்திருக்கின்றார்.

நாம் இரண்டாம் தரப் பிரஜையான என கேள்வி, கேட்டு தேசிய ரீதியாக கெத்தான விடயத்தை செய்யவில்லை. மாறாக , இலங்கைக்கு இருக்கும் அவப்பெயரை உறுதிப்படுத்திவிட்டே வந்திருக்கின்றீர்கள்.

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு : தேநீருக்கும் புதிய விலை

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு : தேநீருக்கும் புதிய விலை

சர்வதேச விசாரணையை வேண்டாம்

அதிகாரத்திற்கு வருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தி, சுமார் 300 பேரை பலியெடுத்த நாட்டில் இருந்து தானே வருகின்றீர்கள் என கேட்கின்றனர். முன்னர் உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட, சிறிய, அழகான தீவு என்றே இலங்கையை அடையாளப்படுத்தினர்.

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல் | Ranil Also Reason World Consider 2Nd Class Peoples

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திவிட்டு, அதனை மூடிமறைக்கும் வகையில் ஜனாதிபதி, சர்வதேச விசாரணையை வேண்டாம் என கூறும் நாடு தானே இலங்கை என கூறுகின்றனர். அவ்வாறு தான் கேட்கின்றனர்.

லசந்த விக்ரமதுங்கவை ரிப்பொலி பிளட்ரூனுடன் சேர்ந்து எவ்வாறு கொலை செய்தோம் என்பதை வாக்குமூலமாக வழங்க தாம் தயார் என அசாத் மௌலானா கூறுகின்றார். விசாரணை செய்வதற்கு முடியாது என ஜனாதிபதி கூறுகின்றார்.

மிக் கொள்வனவில் திருடிய முன்னாள் பாதுகாப்பு செயலாளரை பாதுகாக்கும் ஜனாதிபதி உள்ள நாட்டே உங்களது இலங்கை என கேட்டுகின்றனர். நாம் எவ்வாறு பதில் வழங்குவது. உலகிலுள்ள நாடுகள், எம்மை ஏன் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதுகின்றனர் என்பதற்கு பல உதாரணங்களை என்னால் கூற முடியும் என்றார்.

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் அடைக்கலநாதன்

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் அடைக்கலநாதன்


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US