ஜனாதிபதி இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
