பயந்து ஓடி ஒழிந்தவர்கள் தற்போது மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்-எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குள் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்ட போது, அந்த கட்சி அரசியல் உடன்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்தியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஓடி ஒழிந்தவர்கள் தற்போது மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்

நிதியமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கடந்த காலத்தில் மக்களுக்கு பயந்து ஒழிந்துக்கொண்டிருந்தனர் என்றாலும் தற்போது அந்த அச்சம் நீங்கி மக்களுக்கு முன்னால் வந்துள்ளனர்.
2019 ஆம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செய்த ஏமாற்று வேலைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், மீனவர்கள், கமத்தொழிலாளர்களுக்கு இழப்பீடுகளை செலுத்தவும் தொழில்களை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்கவும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க பணம் இல்லை என்ற போதிலும் 37 ராஜாங்க அமைச்சர்கள், 20 அமைச்சரவை அமைச்சர்களை பராமரிக்க அரசாங்கத்திடம் பணம் இருக்கின்றது.
பொம்மை ஜனாதிபதியால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா?

மேலும் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருகின்றனர்.69 லட்சம் மக்களின் பலத்தை கொண்டிருந்த ஜனாதிபதிக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் போனது.
இந்த நிலையில் பொம்மை ஜனாதிபதிக்கும் எவ்வித மக்கள் ஆணையும் இல்லாத அமைச்சர்களால் பிரச்சினைகளை முடியுமா?.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி இருந்தாலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி போராட்டகாரர்களை அடக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.